கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனை!

கோவையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.


கோவை: கோவையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்பு தந்தைக்கு அயுள்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவையை சேர்ந்த பெண் ஒருவர் தனது முதல் கணவரை பிரிந்து, இரண்டு பெண் குழந்தைகளுடன் இரண்டாவது கணவருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் 8 வயது சிறுமியை மிரட்டி, அவரது வளர்ப்பு தந்தை பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி, தாயிடம் கூறியதையடுத்து அவர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் சிறுமியின் வளர்ப்பு தந்தை குற்றவாளி என்றும், அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் அவர் தீர்ப்பின் போது நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால் அவரை உடனடியாக பிடிக்க பிடிவாரன்ட் போடப்பட்டது.

Newsletter

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...

கோவையில் SP வேலுமணியின் ஐந்தாவது முறை வெற்றிக்கு அண்ணாமலை வாழ்த்து

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் உள்ள தனது இல்லத்தில் SP வேலுமணியை சந்தித்து, அவரது ஐந்த...

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் 63-வது வார்டு இராமநாதபுரம் மற்றும் ஒலாம்பஸ் பகுதிகளில் வீடு வீடா...