உடுமலையில் சரக்கு வேன் மீது ஸ்கூட்டர் மோதி விபத்து - விவசாயி உயிரிழப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கண்ணப்பன் நகரைச் சேர்ந்த அன்பழகன் (40), வேலை விஷயமாக இருசக்கர வாகனத்தில் பூலாங்கிணறு பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த சரக்கு வாகனம் மீது மோதிய விபத்தில் பலியானார்.


திருப்பூர்: பூலாங்கிணறு பகுதியில் நின்றிருந்த சரக்கு வாகனம் மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கண்ணப்பன் நகரைச் சேர்ந்தவர் அன்பழகன் (40). விவசாயியான இவர் சொந்த வேலை காரணமாக உடுமலைக்கு வந்து விட்டு மீண்டும் தனது இருசக்கர வாகனத்தில், பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.



பூலாங்கிணறு பகுதியில் வந்த போது சாலையோரம் நின்றிருந்த சரக்கு வேனின் மீது நிலை தடுமாறி இருசக்கர வாகனம் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அன்பழகனை, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் அன்பழகன் பரிதாபமாக உயிரிழந்தார்.விபத்து குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...