ஹோலி முடிந்து திருப்பூர் திரும்பிய வடமாநில தொழிலாளர்கள் - காவல்துறை சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு!

வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை முடிந்து திருப்பூர் திரும்பிய தொழிலாளர்களுக்கு ரயில் நிலையத்தில் காவல்துறை சார்பில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.



திருப்பூர்: ஹோலி பண்டிகை முடிந்து திருப்பூருக்கு திரும்பிவரும் வடமாநில தொழிலாளர்களுக்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட பொய்யான சில வீடியோக்கள் காரணமாக வட மாநில தொழிலாளர்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டது.

இதன் காரணமாக ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். மேலும் ஹோலி பண்டிகை என்பதால் மீதம் இருந்த வடமாநில தொழிலாளர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்கு பண்டிகைக்காக சென்றிருந்தனர்.



இந்நிலையில், பண்டிகை முடிந்து தற்போது வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் திருப்பூருக்கு திரும்பி வருகின்றனர். இதனிடையே திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறை சார்பாக வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



வடமாநில தொழிலாளர்களும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்திய போலீசார், அவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட வசதிகள் குறித்தும் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...