சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் மிலிட்டரி காலனி பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், மத்திய அரசை கண்டித்து கோஷங்களையும் எழுப்பினர்.



திருப்பூர்: திருப்பூர் அடுத்த மிலிட்டரி காலனி பகுதியில் சிலிண்டர் உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கடந்த எட்டு ஆண்டுகளில் பலமுறை சமையல் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இந்த மாதம் ஒன்றாம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் 50 ரூபாய் உயர்ந்தது.



இதனிடையே சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த கோரியும் திருப்பூர் மிலிட்டரி காலனி பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மாவட்டத் தலைவர் விஜயா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்கத்தினருடன் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த கோரியும், கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...