புதிய பேருந்து நிலையத்தில் துப்புரவுப் பணிகள் - தாராபுரம் நகராட்சித் தலைவர் ஆய்வு!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புதிய பேருந்து நிலையத்தில் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்தும் பணியில் முறையாக ஈடுபடுகிறார்களா? என நகரராட்சித் தலைவர் பாபு கண்ணன் ஆய்வு செய்தார். 18 வது வார்டில் சாக்கடை கால்வாய், சாலை வசதி, தெரு விளக்கு பராமரிப்பு செய்வது குறித்து பொதுமக்களிடம் அவர் கேட்டறிந்தார்.


திருப்பூர்: தாராபுரம் பஸ் நிலையம் பகுதியில் டீ கடைகள், காய்கறி மற்றும் பழக்கடைகள், பெட்டிக்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இருந்து ஏராளமான குப்பைகள் தினம் தோறும் விழுகின்றன.

அத்துடன் புதிய பஸ் நிலையத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் மக்கள் பயன்படுத்தும் குளிர்பானங்கள் மற்றும் குப்பைகளை வீசிச் செல்கின்றனர்.



இந்த குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்தும் பணியில் முறையாக ஈடுபடுகிறார்களா? என நகரராட்சித் தலைவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து தாராபுரம் 18 வது வார்டில் அடிப்படை வசதிகளான சாக்கடை கால்வாய், சாலை வசதி, தெரு விளக்கு பராமரிப்பு செய்வது குறித்து பொதுமக்களிடம் அவர் கேட்டறிந்தார்.



இந்த ஆய்வின்போது, திமுக நகர செயலாளர் முருகானந்தம், நகராட்சி பொறியாளர் சண்முக வடிவு, உதவி பொறியாளர் காளீஸ்வரி, சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், நகரவை தலைவர் கதிரவன், கவுன்சிலர் செல்லின் பிலோமீனா ஜான்பால், வார்டு செயலாளர் ஜெரால்டு, நகர மாணவரணி துணை அமைப்பாளர் தில்லை முத்து, குடிநீர் மேற்பார்வையாளர் சுப்பிரமணி, துப்புரவு அமைப்பாளர் ஈஸ்வரமூர்த்தி பிரகாஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...