கோவை அருகே கேக்கிற்கு பணம் கேட்டதால் டீக்கடையை சூறையாடிய இளைஞர்கள்! - சிசிடிவி வீடியோ

கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் சாப்பிட்ட கேக்கிற்கு கடைக்காரர் பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த 5 இளைஞர்கள், டீக்கடையில் இருந்த கண்ணாடி ஜார்களை உடைத்து சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தகாமராஜ் என்பவர் டீக்கடை நடத்திவருகிறார். நேற்று இரவு அவரது கடைக்கு 5 இளைஞர்கள் தேநீர் அருந்த வந்துள்ளனர்.



அப்போது, அவர்கள் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கேக்குகளை சாப்பிட்டுள்ளனர். பின்னர், தேநீர் மற்றும் கேக் ஆகியவற்றுக்கு பணம் கொடுக்குமாறு காமராஜ், அந்த இளைஞர்களிடம் கேட்டுள்ளார்.



அதற்கு அவர்கள், கேக் கெட்டுவிட்டதாகவும், அதற்கு பணம் கொடுக்க முடியாது எனவும் கூறியதாகத் தெரிகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், அங்கு திண்பண்டங்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி ஜார்களை தூக்கிப்போட்டு உடைத்து சேதப்படுத்தினார்.



மேலும், டீக்கடைக்காரரை அவர்கள் தாக்க முயன்றபோது, அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டதால் அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதையில் இளைஞர்கள் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டிய காமராஜ், தமது கடையில் இதுபோன்று நடந்துகொள்வது 2வது முறை என்றும் வேதனை தெரிவித்தார்.

மேலும், டீக்கடையைத் தாக்கிய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் அப்போது அவர் கூறினார்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...