அத்திக்கடவு-அவிநாசி குடிநீர்த் திட்டக்குழாயில் உடைப்பு - 30 அடி உயரத்திற்கு பீச்சியடித்த தண்ணீர்!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அத்திக்கடவு-அவிநாசி குடிநீர் திட்டக்குழாயில் சோதனை ஓட்டத்தின்போது ஏற்பட்ட திடீர் உடைப்பால், சுமார் 30 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சிஅடித்து வெளியேறியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.



கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே குன்னத்தூரம்பாளையத்தில் அத்திக்கடவு -அவிநாசி நிலத்தடிநீர் செறிவூட்டல் திட்டத்தின் 6வது நீர்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 19ம் தேதி சோதனை ஓட்டத்திற்காக இங்குள்ள 5வது நீர் ஏற்றும் நிலையத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

அதன்படி குன்னத்தூரம்பாளையம் குளத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில், அங்குள்ள உள்ள 6 மின்மோட்டார்களில், ஒரு மோட்டாரில் நேற்று நீரேற்ற பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அன்னூரில் இருந்து இத்திட்டத்திற்கு செல்லும் பிரதான குழாய்களில் தண்ணீர் திறந்து விடுவதற்கான சோதனை நடத்தப்பட்டது.



அப்போது, வடவள்ளி ஊராட்சி பெரிய புதூரில் உள்ள பிரதான குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு, அன்னூர் - காரமடை சாலையில் 30 அடி உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சிஅடித்து வெளியேறி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அங்குள்ள சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



குழாய் உடைப்பு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் சோதனை ஓட்டத்திற்காக தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதேபோல், குருக்கிளியம்பாளையம், சாலையூர் பகுதிகளிலும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் வெள்ளமாக ஓடியது. இதையடுத்து, தொடர்புடைய அதிகாரிகள், குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வுவ செய்து, பாதிப்புகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...