ஜீவசாந்தி அறக்கட்டளை சார்பில் அணையா அடுப்பு - கோவை கரும்புக்கடை பகுதியில் திறப்பு

ஆதரவற்ற ஏழை மக்களின் பசியை போக்கும் விதமாக ஜீவ சாந்தி அறக்கட்டளை சார்பில் கோவையில் அணையா அடுப்பு எனும் சமுதாய சமையற்கூடத்தை தமிழ்ழாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரஃபி திறந்து வைத்தார்.



கோவை: கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜீவசாந்தி அறக்கட்டளையினர் ஆதரவில்லாமல் உயிரிழந்த உடல்களை அடக்கம் செய்வது, இலவச ஆம்புலன்ஸ் சேவை என பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர்.

குறிப்பாக, கொரோனா கால நேரங்களில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் சேவை பணியை செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

இந்நிலையில், தற்போது மேலும் சேவைப்பணியில் ஈடுபடும் விதமாக அணையா அடுப்பு சமுதாய சமையற்கூடத்தை துவக்கி உள்ளனர்.



ஆதரவற்ற ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் விதமாக கரும்புகடை சேரன் நகர் பகுதியில் துவக்கியுள்ள இதற்கான துவக்க விழா ஜீவசாந்தி அறக்கட்டளையின் தலைவர் சலீம் தலைமையில் நடைபெற்றது.



இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரஃபி, பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் நிறுவனர் குருஜி சிவாத்மா, சி.எஸ்.ஐ.ஆயர் சார்லஸ் சாம்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு அணையா அடுப்பு சமையற்கூடத்தை திறந்து வைத்தனர்.



இந்நிகழ்ச்சியில் ஜீவசாந்தி அறக்கட்டளையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...