ஜீவசாந்தி அறக்கட்டளை சார்பில் அணையா அடுப்பு - கோவை கரும்புக்கடை பகுதியில் திறப்பு

ஆதரவற்ற ஏழை மக்களின் பசியை போக்கும் விதமாக ஜீவ சாந்தி அறக்கட்டளை சார்பில் கோவையில் அணையா அடுப்பு எனும் சமுதாய சமையற்கூடத்தை தமிழ்ழாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரஃபி திறந்து வைத்தார்.



கோவை: கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜீவசாந்தி அறக்கட்டளையினர் ஆதரவில்லாமல் உயிரிழந்த உடல்களை அடக்கம் செய்வது, இலவச ஆம்புலன்ஸ் சேவை என பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர்.

குறிப்பாக, கொரோனா கால நேரங்களில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் சேவை பணியை செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

இந்நிலையில், தற்போது மேலும் சேவைப்பணியில் ஈடுபடும் விதமாக அணையா அடுப்பு சமுதாய சமையற்கூடத்தை துவக்கி உள்ளனர்.



ஆதரவற்ற ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் விதமாக கரும்புகடை சேரன் நகர் பகுதியில் துவக்கியுள்ள இதற்கான துவக்க விழா ஜீவசாந்தி அறக்கட்டளையின் தலைவர் சலீம் தலைமையில் நடைபெற்றது.



இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரஃபி, பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் நிறுவனர் குருஜி சிவாத்மா, சி.எஸ்.ஐ.ஆயர் சார்லஸ் சாம்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு அணையா அடுப்பு சமையற்கூடத்தை திறந்து வைத்தனர்.



இந்நிகழ்ச்சியில் ஜீவசாந்தி அறக்கட்டளையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...