பொள்ளாச்சியில் வாகன ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், ஓட்டுநர்களுக்கு உடல் நலத்தின் முக்கியத்துவம், பான்பராக், பான் மசாலா, புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமை உள்ளிட்டவை குறித்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



கோவை: பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரவு நேரத்தில் இயக்கப்படும் கனரக வாகன ஓட்டுனர்களுக்கு வாகனங்களை இயக்குவது தொடர்பான விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது.



பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஓட்டுநர்களுக்கு உடல் நலத்தின் முக்கியத்துவம் குறித்தும், பல ஓட்டுனர்கள் பயன்படுத்தும் பான்பராக், பான் மசாலா, புகையிலை போன்ற தேவையில்லாத போதை பழக்கவழக்கங்களை கைவிட வேண்டும் என்றும்,



போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் குறித்தும் அவர் அப்போது எடுத்துரைத்தார். மேலும், நீண்ட தூரம் வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது சிறிது நேரம் ஓய்வு எடுத்து செல்ல வேண்டும். அப்போதுதான் விபத்துக்களை தடுக்க முடியும் என்றும் முருகானந்தம் தெரிவித்தார்.



இந்த நிகழ்ச்சியில், ஏராளமான ஓட்டுனர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகண்ணன், டாக்டர் ராஜலட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...