தாராபுரத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் தர்ணா - பரபரப்பு!

தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராணி, மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் சங்க பிரதிநிதிகளை சந்திக்காமல் அலைக்கழித்து வருவதாக கூறி தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர், கோட்ட அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளரை கண்டித்து சாலை பணியாளர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாராபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் தாராபுரம் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ராணியை கண்டித்து நெடுஞ்சாலை துறை அலுவலகத்தை சாலை பணியாளர்கள் முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோட்ட தலைவர் வெங்கடசாமி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், கோட்ட இணைச் செயலாளர் சிவகுமார் மற்றும் மணிமொழி, மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த தர்ணா போராட்டத்தில், தாராபுரம், காங்கேயம், வெள்ளகோவில், மூலனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



இந்நிலையில், திடீரென நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க கொடிகளுடன் பிளக்ஸ் பேனரை பிடித்தவாறு நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்திற்குள், கோட்ட பொறியாளர் ராணியை கண்டித்து கண்டன கோஷங்களுடன் உள்ளே நுழைய முயன்றனர்.



அப்போது அங்கிருந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலுவலக நுழைவாயிலில் நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சாலை பணியாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனைத் தொடர்ந்து கோட்ட பொறியாளர் ராணி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சத்தம் போட வேண்டாம் என்றும் பணிகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் வேலை நேரத்தில் எப்படி ஆர்ப்பாட்டம் செய்ய வந்தீர்கள் என கேள்வி எழுப்பிய நிலையில், ஊழியர்கள் அதற்கு விடுப்பு கடிதம் வழங்கிய பின்னரே போராட்டத்திற்கு வந்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய கோட்ட பொறியாளர் ராணி, புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க வேண்டாம் என கூறிவிட்டு மீண்டும் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்த்த சாலை பணியாளர்கள் ஏமாற்றம் அடைந்த சாலை பணியாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் பேசியதாவது, தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளராக இருந்து வரும் ராணி, அரசாங்க அதிகாரியாக நடந்து கொள்ளாமல் ஜமீன்தார், பண்ணை முதலாளி அம்மாவாக நடந்து வருகிறார்.

பொதுமக்களின் பிரதிநிதிகளை சந்திப்பதில்லை, சாலை பணியாளர்களை, அரசு ஊழியர்களை, சங்கப் பிரதிநிதிகளை சந்திக்க மறுக்கும் போக்கு. அரசு வேலை பார்க்கும் கோட்ட பொறியாளர் ராணிக்கு ஏற்புடையதல்ல. தாராபுரம் கோட்ட பொறியாளர் மீது துறை ரீதியில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை அரசு வழங்கியுள்ள உரிமைகளை வழங்க கோரி மனு கொடுக்க வந்த நிர்வாகிகளை பல மணி நேரம் காக்க வைத்து ராணி முடியாது என்று அவமதிப்பு செய்துள்ளார்.

கோட்ட பொறியாளர் பல நாட்கள் அலுவலகத்திற்கு வருவதில்லை. வந்தாலும் பொதுமக்கள் மற்றும் துறை சார்ந்த ஊழியர்களை யாரையும் சந்திப்பதில்லை, பிரச்சனைகளுக்கு தீர்வு காண என்ன வழி என்பது தெரியாமல் பலரும் சிரமமடைந்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கரூர் தேர்தல் களத்தில் பரபரப்பு: செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு..!

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 7 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று கா...

“எடப்பாடி சொல்வது போல யாருடைய காலிலும் விழுந்த அனுபவம் எனக்கு இல்லை” - காங்கேயத்தில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின...

கோவை வடக்கில் வானதிக்கு ஆதரவாக BJP மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தீவிர பரப்புரை

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் ஓணாம்பாளையத்தில் இன்று பரப்பு...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் தீவிர பிரசாரம்

கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் வீடு வீடாக சென்று பி...

கோவை தெற்கு தொகுதி: ராமநாதபுரம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் ராமநாதபுரம் வார்டு 66 உட்பட பல பகுதிகளில் வீடு வீடாகச் சென்று...

ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்று வாக்கு சேகரித்த K.R. Jayaram

கோவை சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K.R. Jayaram ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்பனையில் ஈடுபட்டு வா...