ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்று வாக்கு சேகரித்த K.R. Jayaram

கோவை சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K.R. Jayaram ஆவாரம்பாளையம் காய்கறி சந்தையில் தேங்காய் விற்பனையில் ஈடுபட்டு வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினார். 24 திட்டங்களை எடுத்துரைத்து இரட்டை இலைக்கு வாக்கு கோரினார். ஒப்புட்டு சாப்பிட்டு சாமானிய மக்களுடன் கலந்துரையாடினார்.


Coimbatore: கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் AIADMK வேட்பாளராக K.R. Jayaram போட்டியிடுகிறார். தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் வீதி வீதியாக நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் இவருக்கு, பொதுமக்கள் மற்றும் பெண்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.




AIADMK பொதுச்செயலாளர் Edappadi Palaniswami மற்றும் BJP மாநிலத் தலைவர் Annamalai ஆகியோர் K.R. Jayaramஐ ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட நிலையில், நேற்று வேட்பாளர் ஆவாரம்பாளையம் பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.




ஆவாரம்பாளையம் காய்கறி சந்தைக்கு சென்ற K.R. Jayaram, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் தான் இந்த தொகுதிக்கு வைத்துள்ள 24 திட்டங்களை எடுத்துரைத்து இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினார். தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவர், ஒரு தேங்காய் கடையில் அமர்ந்து கடைக்காரருடன் இணைந்து தேங்காய் விற்பனையில் ஈடுபட்டார். அங்கு வந்த மக்களிடம் நேரடியாக பேசி ஆதரவு திரட்டினார்.




பின்னர் சந்தையில் உள்ள ஒரு கடையில் ஒப்புட்டு வாங்கி சாப்பிட்டு, காய்கறி சந்தைக்கு வந்த மக்களிடம் ஆதரவு திரட்டினார். சிங்காநல்லூர் MLA K.R. Jayaramஇன் இந்த செயல் சந்தையில் வாக்காளர்களை வெகுவாக கவர்ந்தது.




சந்தையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட K.R. Jayaram பேசும்போது, "சிங்காநல்லூர் தொகுதியில் நான் MLAஆக இருந்தபோது எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளேன். தற்போது மீண்டும் வெற்றி பெற்று MLAஆனதும், இந்த தொகுதிக்கு நிறைவேற்றுவதற்கு என்று 24 திட்டங்களை வைத்துள்ளேன்" என்றார்.




"MLAவாக தேர்ந்தெடுக்கப்பட்டதும், நான் வைத்துள்ள அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்து நிறைவேற்றி, சிங்காநல்லூரை சிறந்த தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்" என்று வாக்குறுதி அளித்தார். வேட்பாளரின் இந்த எளிமையான அணுகுமுறை வாக்காளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


Newsletter

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...