உடுமலை சிலம்ப பயிற்சியாளருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பாராட்டு சான்றிதழ்

உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் ஆதிதிராவிடர் விடுதி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இலவசமாக தற்காப்பு கலைகளை கற்றுத்தந்த சிலம்ப பயிற்சியாளர் சி.வீரமணிக்கு ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மாணவிகளுக்கு இலவசமாக தற்காப்பு கலைகளை பயிற்சிகளை அளித்து வந்த சிலம்ப பயிற்சியாளருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

உடுமலையில் உள்ள பகத்சிங் சிலம்பம், களரி, மார்சியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை ஆசானாகவும், தமிழ்நாடு களரி பைட் அசோசியேசன் மாநில செயலாளராகவும் சி.வீரமணி என்பவர் இருந்து வருகிறார்.

இவர், உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் விடுதி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் தொடர்ந்து சிலம்பம் மற்றும் களரி ஆகிய தற்காப்பு கலை பயிற்சிகளை இலவசமாக கற்று கொடுத்து வந்தார்.



இந்நிலையில், இவரது இலவச சேவையை பாராட்டி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ரவிச்சந்திரன், காங்கேயம் தனி வட்டாட்சியர் கனிமொழி ஆகியோர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.

மாணவியர்களுக்கு சிறப்பாக இலவச சிலம்பபயிற்சி அளித்து வருவதாக பரிந்துரை செய்த தாராபுரம் மகளிர் விடுதி காப்பாளர் சாந்தகுமாரி, அலுவலக கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஆசான் வீரமணிக்கு உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தலைவர் இளமுருகு, துணைத் தலைவர் சிவக்குமார், நூலக வாசகர் வட்ட ஆலோசகர் எம்பி ஐயப்பன், மகளிர் வாசகர் வட்ட தலைவர் நல்லாசிரியர் விஜயலட்சுமி, பணி நிறைவு நூலகர் கணேசன் மற்றும் நூலகர்கள் கலாவதி, மகேந்திரன், பிரமோத், அஷ்ரப், சித்திகா மற்றும் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...