உடுமலை சிலம்ப பயிற்சியாளருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பாராட்டு சான்றிதழ்

உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் ஆதிதிராவிடர் விடுதி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இலவசமாக தற்காப்பு கலைகளை கற்றுத்தந்த சிலம்ப பயிற்சியாளர் சி.வீரமணிக்கு ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மாணவிகளுக்கு இலவசமாக தற்காப்பு கலைகளை பயிற்சிகளை அளித்து வந்த சிலம்ப பயிற்சியாளருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

உடுமலையில் உள்ள பகத்சிங் சிலம்பம், களரி, மார்சியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை ஆசானாகவும், தமிழ்நாடு களரி பைட் அசோசியேசன் மாநில செயலாளராகவும் சி.வீரமணி என்பவர் இருந்து வருகிறார்.

இவர், உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் விடுதி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் தொடர்ந்து சிலம்பம் மற்றும் களரி ஆகிய தற்காப்பு கலை பயிற்சிகளை இலவசமாக கற்று கொடுத்து வந்தார்.



இந்நிலையில், இவரது இலவச சேவையை பாராட்டி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ரவிச்சந்திரன், காங்கேயம் தனி வட்டாட்சியர் கனிமொழி ஆகியோர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.

மாணவியர்களுக்கு சிறப்பாக இலவச சிலம்பபயிற்சி அளித்து வருவதாக பரிந்துரை செய்த தாராபுரம் மகளிர் விடுதி காப்பாளர் சாந்தகுமாரி, அலுவலக கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஆசான் வீரமணிக்கு உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தலைவர் இளமுருகு, துணைத் தலைவர் சிவக்குமார், நூலக வாசகர் வட்ட ஆலோசகர் எம்பி ஐயப்பன், மகளிர் வாசகர் வட்ட தலைவர் நல்லாசிரியர் விஜயலட்சுமி, பணி நிறைவு நூலகர் கணேசன் மற்றும் நூலகர்கள் கலாவதி, மகேந்திரன், பிரமோத், அஷ்ரப், சித்திகா மற்றும் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...