உடுமலை சிலம்ப பயிற்சியாளருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பாராட்டு சான்றிதழ்

உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் ஆதிதிராவிடர் விடுதி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இலவசமாக தற்காப்பு கலைகளை கற்றுத்தந்த சிலம்ப பயிற்சியாளர் சி.வீரமணிக்கு ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மாணவிகளுக்கு இலவசமாக தற்காப்பு கலைகளை பயிற்சிகளை அளித்து வந்த சிலம்ப பயிற்சியாளருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

உடுமலையில் உள்ள பகத்சிங் சிலம்பம், களரி, மார்சியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை ஆசானாகவும், தமிழ்நாடு களரி பைட் அசோசியேசன் மாநில செயலாளராகவும் சி.வீரமணி என்பவர் இருந்து வருகிறார்.

இவர், உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் விடுதி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் தொடர்ந்து சிலம்பம் மற்றும் களரி ஆகிய தற்காப்பு கலை பயிற்சிகளை இலவசமாக கற்று கொடுத்து வந்தார்.



இந்நிலையில், இவரது இலவச சேவையை பாராட்டி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ரவிச்சந்திரன், காங்கேயம் தனி வட்டாட்சியர் கனிமொழி ஆகியோர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.

மாணவியர்களுக்கு சிறப்பாக இலவச சிலம்பபயிற்சி அளித்து வருவதாக பரிந்துரை செய்த தாராபுரம் மகளிர் விடுதி காப்பாளர் சாந்தகுமாரி, அலுவலக கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஆசான் வீரமணிக்கு உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தலைவர் இளமுருகு, துணைத் தலைவர் சிவக்குமார், நூலக வாசகர் வட்ட ஆலோசகர் எம்பி ஐயப்பன், மகளிர் வாசகர் வட்ட தலைவர் நல்லாசிரியர் விஜயலட்சுமி, பணி நிறைவு நூலகர் கணேசன் மற்றும் நூலகர்கள் கலாவதி, மகேந்திரன், பிரமோத், அஷ்ரப், சித்திகா மற்றும் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...