இலவச வீட்டுமனைப் பட்டா வழங்ககோரி உடுமலையில் கிராம மக்கள் நூதனப் போராட்டம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே லிங்கமநாயக்கன்புதூர் கிராம மக்கள், இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி சமையல் செய்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியம் லிங்கம நாயக்கன் புதூர் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இலவச வீட்டு மனை பட்டா இல்லாமல் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.



பல ஆண்டுகளாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோரிக்கை மனு வழங்கியும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் லிங்கம்நாயக்கன்புதூரில் உள்ள தரிசு நிலத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்ககோரி நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் சமையல் செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்தப் போராட்டம் குறித்து பொதுமக்கள் கூறியதாவது:

நாங்கள் இலவச வீட்டு மனைப்பட்டாக் கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றோம். மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உட்பட வருவாய் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் அதிகாரிகள் இலவச வீட்டு மனை பட்டா வழங்காமல் அலட்சியம் காட்டிவருகின்றனர். ஆகையால், வீட்டுமனை இல்லாத காரணத்தால் நாங்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றோம்.

இப்பகுதியில் உள்ள தரிசு நிலமாக உள்ள பகுதியில் வீட்டுமனை பட்டா உடனே வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தற்சமயம் சமையல் செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...