உடுமலை அருகே இலவச பட்டா வழங்ககோரி வட்டாட்சியரிடம் மனு

உடுமலை அருகே லிங்கமநாயக்கன்புதூரில் 20 ஆண்டுகளாக சொந்தமாக வீடு இல்லாமல் வாடகை வீட்டிலும், ஒரு வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்கள் என்று கூட்டு குடும்பமாக வாழ்ந்து வரும் நிலையில், இலவச வீட்டுமனை பட்டா வழங்ககோரி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


திருப்பூர்: உடுமலை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்ககோரி வட்டாட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு வழங்கினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம், குடிமங்கலம் ஒன்றியம், வடுகபாளையம் ஊராட்சிக்குட்பட்ட லிங்கமநாயக்கன்புதூரில் அருந்ததியர், போயர் மற்றும் வண்ணார் சமூகத்தினர் சுமார் 20 ஆண்டுகளாக சொந்தமாக வீடு இல்லாமல் வாடகை வீட்டிலும், ஒவ்வொரு வீட்டில் இரண்டு,மூன்று குடும்பங்கள் என்று கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.



எனவே இவர்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தை அணுகி பல்வேறு கால கட்டங்களில் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு மனு செய்துள்ளனர்.



மேலும் தொடர்ந்து உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் சென்று வட்டாட்சியர் கண்ணாமணியிடம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி இன்று மனு வழங்கினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...