கோவை அருகே ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு விழா

கோவை துடியலூரை அடுத்த குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆனந்த பொன்னுசாமி நகர் பகுதியில் தார் சாலை மற்றும் இதர பணிகளை செய்த ஊராட்சித் தலைவர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றியக் கவுன்சிலர், ஊராட்சித் துணைத் தலைவர் ஆகியோருக்கு நலச்சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.



கோவை: கோவை அருகே அடிப்படை வசதி பணிகளை செய்த ஊராட்சி தலைவர் ரவி உள்ளிட்டோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆனந்த் பொன்னுசாமி நகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஊராட்சி சார்பில் மாநில நிதிக்குழு மானியத்திலிருந்து ரூ.4.50 லட்சம் மதிப்பில் தார் சாலையும், 15வது நிதிக்குழு மானியத்திலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் சாலை பணிகள் மற்றும் இதர பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்பணிகளைச் செய்து கொடுத்த குருடம்பாளையம் ஊராட்சித் தலைவர் ரவி, மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், ஒன்றியக் கவுன்சிலர் ஆறுச்சாமி, ஊராட்சித் துணைத் தலைவர் வசந்தாமணி விஸ்வநாதன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆன்ந்த் பொன்னுசாமி நகர் நலச்சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.



இதில் அப்பகுதியில் போடப்பட்டுள்ள புதிய தார்ச்சாலையினை ஊராட்சித் தலைவர் ரவி ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.



தொடர்ந்து நடைபெற்ற விழாவில் ஊராட்சித் தலைவர் ரவி, மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், ஒன்றியக் கவுன்சிலர் வேலுச்சாமி, ஊராட்சித் துணைத் தலைவர் வசந்தாமணி விஸ்வநாதன் ஆகியோருக்கு நலச்சங்கம் சார்பில் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஊராட்சித் தலைவர் ரவி, இப்பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஊராட்சி தயாராக இருப்பதாக தெரிவித்தார்.



மேலும் இப்பகுதியில் உள்ள பூங்காவிற்கு தேவையான குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களை விரைவில் அமைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...