மடத்துக்குளம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் அரசியல் பயிலரங்கம்

மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குமரலிங்கம் பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் பாபு ராஜேந்திர பிரசாத் மற்றும் மாவட்ட பொருளாளர் பாலமுருகன் தலைமையில் அரசியல் பயிலரங்க நிகழ்வு நடைபெற்றது.


திருப்பூர்: மடத்துக்குளம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குமரலிங்கம் பேரூராட்சியில் திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் பாபு ராஜேந்திர பிரசாத் மற்றும் மாவட்ட பொருளாளர் பாலமுருகன் தலைமையில் அரசியல் பயிலரங்க நிகழ்வு நடைபெற்றது.

குமரலிங்கம் பேருந்து நிலையத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் புலிக்கொடி ஏற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்தார். அதே இடத்தில் தளியை சார்ந்த ஈழ போராட்டத்திற்காகத் தடா வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட மறைந்த போராளி தடா.மாரிமுத்து முதலாம் ஆண்டு புகழ் வணக்க நிகழ்வு கையூட்டு ஊழல்-ஒழிப்பு பாசறை மாநிலச் செயலாளர் ஈசுவரன் தலைமையில் நடைபெற்றது.



தொடர்ந்து அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மாநிலச் செயலாளர் ஈஸ்வரன், அரசு அலுவலகங்களில் கையூட்டு கொடுக்காமல் வேலைகளைச் செய்வது குறித்த வழிமுறைகளையும், கையூட்டு கொடுத்திருந்தால் அதைத் திரும்பப் பெறும் வழிமுறைகள் குறித்தும் பேசினார் தொடர்ந்து பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் வாக்குச்சாவடி கட்டமைப்பு குறித்தும், வாக்குச்சாவடி அரசியல் குறித்தும் விரிவாக உரையாற்றினார்.

தமிழ்த்தேசிய அரசியல் குறித்தும், நாம் தமிழர் கட்சியின்‌ கொள்கைகள் குறித்தும் சிறப்புரையாற்றிய மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி, அருந்ததியர் சமூக மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாகக் கூறப்படும் அவதூறை மறுத்துப் பேசினார்.

மேலும் அவர் பேசும்‌போது, அருந்ததிய சமூக மக்களின் சமூக, பொருளாதார விடுதலையின் திராவிட கட்சிகளின் துரோகங்கள் குறித்தும், இன்னும்‌ அவர்களை ஏழ்மை நிலையில் வைத்து வாக்கிற்குக் காசு கொடுத்து ஏமாற்றுவது குறித்தும், அரசியல் அங்கீகாரம் வழங்காதது குறித்தும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.



இறுதியாக மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் மற்றும் பொள்ளாச்சி மண்டல பொறுப்பாளர் சுரேசுகுமார் கடந்தாண்டு சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்குச் சிறந்த கள செயல்பாட்டாளர்கள் என்ற சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். 287 வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி முகவர்களை இந்த ஆண்டு இறுதிக்குள் நியமிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...