கோவையில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண் சாதனையாளர்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் விருது

கோவையை சேர்ந்த மருத்துவர்கள், ஆசிரியர்கள், சமூக சேவை, தொழில் முனைவோர், மற்றும் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு பரிசு பெற்ற என்.சி.சி மாணவிகள் என 25 பெண் சாதனையாளர்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் விருது, பாஜக சார்பில் வழங்கப்பட்டது.


கோவை: கோவையில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண் சாதனையாளர்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் விருது வழங்கி, கோவை மாவட்ட பாஜக மகளிரணி கவுரவித்தது.



கோவை தெற்கு மாவட்ட பாஜக மகளிரணி சார்பில், சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக கோவையை சேர்ந்த மருத்துவர்கள், ஆசிரியர்கள், சமூக சேவை, தொழில் முனைவோர், மற்றும் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு பரிசு பெற்ற என்.சி.சி மாணவிகள் என 25 பெண் சாதனையாளர்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் விருதுகள் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கே.வசந்தராஜன், மாநில மகளிரணி பொதுச்செயலாளர் மோகன பிரியா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். கோவை தெற்கு மாவட்ட மகளிரணி தலைவி அருணா முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கே.வசந்தராஜன் பேசியதாவது:

பெண்கள் என்றாலே சாதனையாளர்கள் தான், ஆண்களை விட வலிமையாளர்கள் பெண்களே, குடும்ப வாழ்க்கையை கையால்வதிலும், பல்வேறு துறைகளிலும் சிறந்த விளங்குகின்றனர். பொதுவாக பெண்கள் துணையில்லாமல் ஆண்களால் குழந்தை வளர்க்க முடியாது, ஆனால் ஒரு பெண் எந்த துணை இல்லாமலேயே குழந்தைகளை வளர்ப்பதோடு தனது வாழ்க்கையை மேம்படுத்துகின்றனர்.

இந்திரா காந்தி பெண் பிரதமர் உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்தார். இந்தியாவிலேயே சிறந்த கோவையில் உள்ள கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் என பெண் நிர்வாகிகளே உள்ளனர். தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக தெலுங்கானா ஆளுநராக இருப்பவர் தமிழிசை சவுந்திரராஜன் என்ற பெண் தான்.

மத்தியில் நமது ஆட்சி சிறப்பாக நடக்க பாஜகவில் உள்ள 11 பெண் அமைச்சர்களும் முக்கிய காரணம். அதே போல பாஜகவில் 33 சதவீதம் பெண்களுக்கு பொருப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. கம்பீரமாக வலம் வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளாட்சியில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளார்.

தமிழகத்திலேயே கோவை மாவட்ட மகளிர் அணி தான் சிறந்த அணியாக உள்ளது. கொடுத்து பணிகளை விட அதிக பணிகளை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...