கோவையில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண் சாதனையாளர்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் விருது

கோவையை சேர்ந்த மருத்துவர்கள், ஆசிரியர்கள், சமூக சேவை, தொழில் முனைவோர், மற்றும் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு பரிசு பெற்ற என்.சி.சி மாணவிகள் என 25 பெண் சாதனையாளர்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் விருது, பாஜக சார்பில் வழங்கப்பட்டது.


கோவை: கோவையில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண் சாதனையாளர்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் விருது வழங்கி, கோவை மாவட்ட பாஜக மகளிரணி கவுரவித்தது.



கோவை தெற்கு மாவட்ட பாஜக மகளிரணி சார்பில், சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக கோவையை சேர்ந்த மருத்துவர்கள், ஆசிரியர்கள், சமூக சேவை, தொழில் முனைவோர், மற்றும் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு பரிசு பெற்ற என்.சி.சி மாணவிகள் என 25 பெண் சாதனையாளர்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் விருதுகள் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கே.வசந்தராஜன், மாநில மகளிரணி பொதுச்செயலாளர் மோகன பிரியா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். கோவை தெற்கு மாவட்ட மகளிரணி தலைவி அருணா முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கே.வசந்தராஜன் பேசியதாவது:

பெண்கள் என்றாலே சாதனையாளர்கள் தான், ஆண்களை விட வலிமையாளர்கள் பெண்களே, குடும்ப வாழ்க்கையை கையால்வதிலும், பல்வேறு துறைகளிலும் சிறந்த விளங்குகின்றனர். பொதுவாக பெண்கள் துணையில்லாமல் ஆண்களால் குழந்தை வளர்க்க முடியாது, ஆனால் ஒரு பெண் எந்த துணை இல்லாமலேயே குழந்தைகளை வளர்ப்பதோடு தனது வாழ்க்கையை மேம்படுத்துகின்றனர்.

இந்திரா காந்தி பெண் பிரதமர் உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்தார். இந்தியாவிலேயே சிறந்த கோவையில் உள்ள கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் என பெண் நிர்வாகிகளே உள்ளனர். தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக தெலுங்கானா ஆளுநராக இருப்பவர் தமிழிசை சவுந்திரராஜன் என்ற பெண் தான்.

மத்தியில் நமது ஆட்சி சிறப்பாக நடக்க பாஜகவில் உள்ள 11 பெண் அமைச்சர்களும் முக்கிய காரணம். அதே போல பாஜகவில் 33 சதவீதம் பெண்களுக்கு பொருப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. கம்பீரமாக வலம் வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளாட்சியில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளார்.

தமிழகத்திலேயே கோவை மாவட்ட மகளிர் அணி தான் சிறந்த அணியாக உள்ளது. கொடுத்து பணிகளை விட அதிக பணிகளை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...