கோவையில் நாய்கள் இனப்பெருக்க மையத்தில் தீவிபத்து - 10க்கும் மேற்பட்ட நாய்கள் பலி

கோவை வடவள்ளியில் பாபு என்பவர் உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பின்றி நாய்கள் இனப்பெருக்க மையத்தை நடத்தி வந்ததாகவும், தீ விபத்து ஏற்பட்டபோது அங்கு யாரும் இல்லாததால் சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்து விட்டதாகவும், பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை வடவள்ளி அடுத்த வீரகேரளம், சிவகாமி நகர் பகுதியில் செயல்பட்டு வந்த நாய்கள் இனப்பெருக்கு மையத்தில் மாலை திடிரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு யாரும் இல்லாததால் கூண்டில் இருந்து வெளியே வர முடியாமல் சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளேயே சிக்கி தீயில் கருகி உயிரிழந்தன.



வனவிலங்கு நல ஆர்வலர்களுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள் அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரே ஒரு நாயை மட்டும் மீட்டு அதற்கு சிகிச்சை அளித்தனர்.

இந்த விபத்து தொடர்பாக தேசிய விலங்குகள் நல வாரிய பிரதிநிதியான பிரதீப் பிரபாகரன் என்பவர் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.



அதில் பாபு என்பவர் உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பின்றி நாய்கள் இனப்பெருக்க மையத்தை நடத்தி வந்ததாகவும், தீ விபத்து ஏற்பட்டபோது அங்கு யாரும் இல்லாததால் சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்து விட்டதாகவும், எனவே அலட்சியமாகவும் அஜாக்கிரதையாகவும் செயல்பட்ட பாபு என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, நாய்கள் இனப்பெருக்க மைய உரிமையாளர் பாபு என்பவரை தேடி வருகின்றனர். நாய்கள் இனப்பெருக்க மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளியேற முடியாமல் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் கூண்டிலேயே கருகி உயிரிழந்த சம்பவம் விலங்கு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...