கோவையில் நாய்கள் இனப்பெருக்க மையத்தில் தீவிபத்து - 10க்கும் மேற்பட்ட நாய்கள் பலி

கோவை வடவள்ளியில் பாபு என்பவர் உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பின்றி நாய்கள் இனப்பெருக்க மையத்தை நடத்தி வந்ததாகவும், தீ விபத்து ஏற்பட்டபோது அங்கு யாரும் இல்லாததால் சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்து விட்டதாகவும், பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை வடவள்ளி அடுத்த வீரகேரளம், சிவகாமி நகர் பகுதியில் செயல்பட்டு வந்த நாய்கள் இனப்பெருக்கு மையத்தில் மாலை திடிரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு யாரும் இல்லாததால் கூண்டில் இருந்து வெளியே வர முடியாமல் சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளேயே சிக்கி தீயில் கருகி உயிரிழந்தன.



வனவிலங்கு நல ஆர்வலர்களுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள் அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரே ஒரு நாயை மட்டும் மீட்டு அதற்கு சிகிச்சை அளித்தனர்.

இந்த விபத்து தொடர்பாக தேசிய விலங்குகள் நல வாரிய பிரதிநிதியான பிரதீப் பிரபாகரன் என்பவர் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார்.



அதில் பாபு என்பவர் உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பின்றி நாய்கள் இனப்பெருக்க மையத்தை நடத்தி வந்ததாகவும், தீ விபத்து ஏற்பட்டபோது அங்கு யாரும் இல்லாததால் சுமார் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்து விட்டதாகவும், எனவே அலட்சியமாகவும் அஜாக்கிரதையாகவும் செயல்பட்ட பாபு என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, நாய்கள் இனப்பெருக்க மைய உரிமையாளர் பாபு என்பவரை தேடி வருகின்றனர். நாய்கள் இனப்பெருக்க மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளியேற முடியாமல் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் கூண்டிலேயே கருகி உயிரிழந்த சம்பவம் விலங்கு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...