வாயில் காயத்துடன் மீட்கப்பட்ட பெண் காட்டுயானை - பொள்ளாச்சியில் சிகிச்சை பலனின்றி பலி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் அருகே உள்ள வரகளியார் முகாமில் கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பெண் காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை வன சரகம் ஆதிமாதையனூர் பகுதியில் வாயில் காயமடைந்த நிலையில் உணவு உட்கொள்ள முடியாமல் தவித்து வந்த சுமார் 15 வயதுமிக்க பெண் காட்டு யானை டாப்ஸ்லிப் அருகே உள்ள வரகளியார் வனத்துறை யானைகள் பயிற்சி மையத்திற்கு கடந்த 17ம் தேதி இரவு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டது.



இரண்டு தினங்களாக யானைக்கு வன கால்நடை மருத்துவ குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், வாயில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில தினங்களாக உணவு உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வந்த யானைக்கு மருத்துவர்கள் குளுகோஸ் போன்ற மருந்துகள் செலுத்தி வந்தனர்.



ஆனால், சோர்வுடனே காணப்பட்ட பெண் காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கால்நடை மருத்துவக் குழுவினர் மூலம் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலரும் ஆனைமலை புலிகள் காப்பக கலை இயக்குனருமான ராமசுப்பிரமணியம் தெரிவித்துள்ளர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...