பழங்குடியின மக்களின் நலனை தமிழக அரசு காத்து வருகிறது - அமைச்சர் கயல்விழி பெருமிதம்!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நேரு யுவகேந்திரா சங்கத்தான் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட 14ஆவது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியின் நிறைவு நாள் விழாவில், சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார்.


கோவை: பழங்குடி மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நேரு யுவகேந்திரா சங்கத்தான் அமைப்பின் சார்பில் 14ஆவது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியின் நிறைவு நாள் விழா இன்று நடைபெற்றது.



இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் பங்கேற்றார். இதில், மாநகராட்சி ஆணையர் பிரதாப்குமார், நேரு யுவகேந்திராவின் மாநில இயக்குநர் செந்தில் குமார், பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த நிகழ்வில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்களின் கலாச்சார நடன நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, பழங்குடி மாணவர்கள் இந்நிகழ்ச்சி குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.



மேலும், நடனப் போட்டி, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.



இந்நிகழ்வில் அமைச்சர் பேசியதாவது, காடுகளை பாதுகாப்பதில் பழங்குடியின மக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தமிழ்நாட்டில் 36-க்கும் மேற்பட்ட பழங்குடியின பிரிவுகள் உள்ளன. இவர்களது நலனுக்காகவும், வாழ்க்கை தர மேம்பாட்டிற்காகவும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பழங்குடியின மக்களின் மொழி, கலாச்சாரம் ஓவியம் ஆகியவற்றை பாதுகாக்கவும் மேம்படுத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழங்குடியின மக்கள் இயற்கை வளங்களிலிருந்து தயாரிக்கும் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்வதற்காகவும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

பழங்குடியின மக்கள் தங்களது இடத்திலிருந்து வெளியூர் செல்ல பொதுவாக விரும்ப மாட்டார்கள். அதனால் மற்ற மக்களோடு பின்தங்கி இருப்பார்கள். இந்நிலையில் பழங்குடியின மக்கள் வெளிநாடு சென்று கல்வி கற்கும் வகையில், அவர்களுக்கான வருமான உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளது.

18 பழங்குடியின மாணவர்களை வெளிநாட்டிற்கு சென்று படிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மேலும், பழங்குடியின மக்களுக்காக வீடு கட்டித் தரப்பட்டுள்ளது. கல்வி, விளையாட்டு, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் அவர்களை பங்கேற்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பழங்குடியின மக்கள் கல்வி கற்பதில் சிக்கலாக உள்ள சாதி சான்றிதழ் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் விரைவாக சாதி சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...