கோவையில் பெண்களுக்கான இன்னர்வீல் கிளப் அமைப்பு தொடக்கம்-புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!

கோவையில் பெண்கள் மட்டும் உறுப்பினர்களாக கொண்ட இன்னர் வீல் கிளப் கோயமுத்தூர் சினெர்ஜி எனும் புதிய அமைப்பு துவங்கப்பட்டது. இந்த விழாவில் அமைப்பிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.


கோவை: கோவையில் பெண்கள் மட்டும் உறுப்பினர்களாக கொண்ட இன்னர் வீல் கிளப் கோயமுத்தூர் சினெர்ஜி எனும் புதிய அமைப்பு துவங்கப்பட்டது.

கோவையில் இன்னர் வீல் மேற்கு பரிந்துரைப்படி இன்னர் வீல் கோயமுத்தூர் சினெர்ஜி எனும் புதிய அமைப்பு துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தலைவர் ஆஷா சுனில், மாவட்ட இ.எஸ்.ஓ.சிந்து சேது ஆகியோர் கலந்து கொண்டனர்.



26 பெண் உறுப்பினர்களை கொண்டு செயல்பட உள்ள இந்த அமைப்பின் தலைவராக பிரியா ராம்குமார், செயலாளராக அசோக் சங்கீதா ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர். பல்வேறு சேவை திட்டங்களை முன்னெடுத்து செயல்பட, இன்னர்வீல் கோயமுத்தூர் சினெர்ஜி அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உறுதி எடுத்து கொண்டனர்.



முதல் சேவை திட்டமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தற்காப்பு கலையான களரி, அடிமுறை, கராத்தே ஆகிய பயிற்சிகளை வேர்ல்டு களரி, அடிமுறை ஃபெடரேஷன் மற்றும் அட்வென்சர் மார்ஷியல் ஆர்ட் அகாடமி ஆகியோருடன் இணைந்து இலவசமாக ஒரு வருடம் பயிற்சி அளிக்க உள்ளதாக புதிய நிர்வாகிகள் தெரிவித்தனர்.



இந்நிகழ்ச்சியில் இன்னர் வீல் அமைப்பின் மூத்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...