கோவை வெள்ளலூர் அருகே குடிபோதையில் நண்பரை குத்திக்கொலை செய்தவர் கைது!

வெள்ளலூர் அடுத்த வள்ளியமைபுரம் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் நண்பர் கோபிநாத்தை குத்திக் கொலை செய்த முனியப்பனை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வெள்ளலூர் அருகே குடிபோதையில் நண்பரை கத்தியால் குத்திக்கொலை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.



வெள்ளலூர் அருகேயுள்ள வள்ளியமைபுரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கோபிநாத் (33). இவருக்கு ஜோதி(28) என்ற மனைவியும், ராஜேஷ்குமார்(10) என்ற மகனும் உள்ளனர்.



இவரது நண்பரான முல்லை நகரை சேர்ந்த முனியப்பன்(25) என்பவர் பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறார். நேற்று நள்ளிரவு மதுரை வீரன் கோவில் அருகே கோபிநாத்தும், முனியப்பனும் மது அருந்துவிட்டு பேசிகொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த முனியப்பன், கோபிநாத்தின் மார்பில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த கோபிநாத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கோபிநாத் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை அடுத்து தகவல் அறிந்த போத்தனூர் காவல்துறையினர் முனியப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...