கோவை வெள்ளலூர் அருகே குடிபோதையில் நண்பரை குத்திக்கொலை செய்தவர் கைது!

வெள்ளலூர் அடுத்த வள்ளியமைபுரம் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் நண்பர் கோபிநாத்தை குத்திக் கொலை செய்த முனியப்பனை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வெள்ளலூர் அருகே குடிபோதையில் நண்பரை கத்தியால் குத்திக்கொலை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.



வெள்ளலூர் அருகேயுள்ள வள்ளியமைபுரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கோபிநாத் (33). இவருக்கு ஜோதி(28) என்ற மனைவியும், ராஜேஷ்குமார்(10) என்ற மகனும் உள்ளனர்.



இவரது நண்பரான முல்லை நகரை சேர்ந்த முனியப்பன்(25) என்பவர் பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறார். நேற்று நள்ளிரவு மதுரை வீரன் கோவில் அருகே கோபிநாத்தும், முனியப்பனும் மது அருந்துவிட்டு பேசிகொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த முனியப்பன், கோபிநாத்தின் மார்பில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த கோபிநாத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கோபிநாத் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை அடுத்து தகவல் அறிந்த போத்தனூர் காவல்துறையினர் முனியப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...