தாராபுரம் அரசு மருத்துவமனையில் நீதிபதிகள் திடீர் ஆய்வு - போக்சோ வழக்கு சோதனை குறித்து விசாரணை!

தாராபுரம் அரசு மருத்துவமனையில் இன்றைய தினம் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி பாலு மற்றும் தாராபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி எஸ்.பாபு ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவர்களிடம் போக்சோ வழக்கில் சிறார்களுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகள் குறித்து கேட்டறிந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் மாவட்ட மகிளா நீதிபதிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தாராபுரம் அரசு மருத்துவமனையில் திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி பாலு மற்றும் தாராபுரம் குற்றவியல் நடுவர் எஸ்.பாபு ஆகியோர் இன்று திடீரென அரசு மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.



அப்போது தலைமை மருத்துவர் சிவபாலன் மற்றும் குழுவினருடன் மருத்துவமனையில் பெண்கள் பொது வார்டு, பிரசவ வார்டு, குழந்தைகள் பிரசவ வார்டு, ஆப்ரேசன் தியேட்டர் உள்ளிட்ட பகுதி அறைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.



பின்னர் நீதிபதிகள் மருத்துவர்களிடம் தாராபுரம் மகளிர் காவல் நிலையத்துக்கு வரும் போக்சோ வழக்குகள் குறித்தும் போலீசார் குற்றவாளிகளை பரிசோதனைக்கு வரும் போது குறிப்பாக 18 வயதுக்கு குறைவான சிறார் குழந்தைகளுக்கு செய்யப்படும் மருத்துவ பரிசோதனைகள் குறித்து மருத்துவர்கள் குழுவினரிடம் கேட்டறிந்தனர்.



இந்த ஆய்வின் போது, தாராபுரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவபாலன், மருத்துவர்கள் சத்தியராஜ் மற்றும் பெரியசாமி, குற்றவியல் காவல் ஆய்வாளர் அன்புச் செல்வி, உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் பலரும் உடனிருந்தனர்.

அப்போது போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஞானவேல் தலைமையில் அரசு மருத்துவமனை நுழைவாயில் முன்பு 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...