கோவையில் தூய்மை பணியாளர் விபத்தில் பலி - இழப்பீடு கோரி உடலை வாங்க மறுத்து போராட்டம்!

கோவை கவுண்டம்பாளையம் அருகே பணிக்கு சென்ற தூய்மை பணியாளர் சித்ரா (48) மீது தனியார் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி உடலை வாங்க மறுத்து, சக பணியாளர்கள் மற்றும் சமூக நீதிக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து சக பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாநகராட்சி கவுண்டம்பாளையம் பகுதியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் சித்ரா(48). இவர் பணிக்கு புறப்பட்டு சென்ற போது, தனியார் வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக எடுத்து செல்லப்பட்டது.



இந்நிலையில் சித்ராவின் உடலை வாங்க மறுத்து சக தூய்மை பணியாளர்கள், மற்றும் அவரது குடும்பத்தினர் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, உயிரிழந்த சித்ராவின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.



இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த சமூக நீதிக்கட்சி தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அக்கட்சியினர், தூய்மை பணியாளர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...