உடுமலையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு

உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், உடுமலையில் அமைச்சர் மு.பெ சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம், தளி, மடத்துக் குளம், கணியூர், கொமரலிங்கம், சங்கரமநல்லுார் பேரூராட்சி பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், உடுமலையில்நடைபெற்றது. அமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர்வினீத் முன்னிலை வகித்தார்.



அனைத்துத்துறை அலுவலர்களும் ஊரகம் மற்றும் நகரப்பகுதிகளில், வளர்ச்சித்திட்ட பணி களை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, 11 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.16.75 லட்சம் மதிப்பிலான கடனுதவிக்களுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.



பின்னர் பல்வேறு துறைகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த நலத்திட்டங்கள் குறித்து கண்காட்சியினைஅமைச்சர் மு.பெ. சாமிநாதன் பார்வையிட்டார்.



இந்த ஆய்வுக் கூட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள், திமுக ஒன்றிய நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பேரூராட்சித் தலைவர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்கள்பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...