பல்லடத்தில் டூரிஸ்ட் வேனை அதிவேகத்தில் இயக்கிய ஓட்டுநருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

திருச்சி-கோவை சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று தாராபுரத்தில் இருந்து பல்லடம் வழியாக கோவைக்கு அதிவேகமாக தனியார் டூரிஸ்ட் வேனை இயக்கிய ஓட்டுநருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.



திருப்பூர்: பல்லடத்தில் வேகமாக இயக்கப்படுவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் தனியார் டூரிஸ்ட் வேன் ஓட்டுநருக்கு போக்குவரத்து போலீசார் 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் அதிகப்படியான விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், தாராபுரத்தில் இருந்து பல்லடம் வழியாக கோவையை நோக்கி தனியார் டூரிஸ்ட் வேன் அதிவேகத்தில் இயக்கப்பட்டது.



இதையடுத்து அந்த வேனை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். 



அதிகவேகமாக பேருந்தை இயக்கிய ஓட்டுநர் ராஜ்குமாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.



பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், விபத்து ஏற்படுத்தும் வகையிலும், அதிவேகமாக வாகனத்தை இயக்கியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.

அதிவேகமாக இனி வாகனத்தை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஓட்டுநர் ராஜ்குமாரை எச்சரித்தும் அனுப்பினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...