உதயநிதி ஸ்டாலினின் கண்ணை நம்பாதே படம் வெளியீடு - தாராபுரத்தில் திமுகவினர் கொண்டாட்டம்

தாராபுரம் திரையரங்குகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கண்ணை நம்பாதே திரைப்படம் இன்று வெளியானது. நகர திமுக இளைஞரணி சார்பில் நகரச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும் நலத்திட்ட உதவிகள் கொடுத்தும் கொண்டாடினர்.



திருப்பூர்: தாராபுரம் திரையரங்குகளில் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் "கண்ணை நம்பாதே" திரைப்படம் இன்று வெளியானது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் "கண்ணை நம்பாதே" திரைப்படம் இன்று வெளியானது.



இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி உள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.



இந்நிலையில் தாராபுரம் சக்தி சினிமா எஸ்.வி.ஆர் திரையரங்கில் இப்படம் வெளியீட்டு விழா கொண்டாட்டங்கள் நடந்தது.



இதில், நகர திமுக இளைஞரணி சார்பில் நகரச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும் நலத்திட்ட உதவிகள் கொடுத்தும் கொண்டாடினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...