கோவையில் சுரங்கப்பாதை தடுப்புத் தூண் விழுந்து விபத்து - அரசுப் பேருந்து சேதம்

கோவையில் லங்கா கார்னர் ரயில்வே பாலத்தின் அருகில் இருந்த சுரங்கப்பாதை தடுப்பு தூண் திடீரென விழுந்ததில் அரசு பேருந்து சேதமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் இருந்து டவுன்ஹால் செல்லும் வழியிலே லங்கா கார்னர் ரயில்வே சுரங்க பாதை அமைந்துள்ளது. இந்த சுரங்க பாதையில் அதிக உயரம் கொண்ட வாகனங்கள் கடந்து செல்ல முடியாது. இதனால் முன் கூட்டியே வாகனங்கள் நிறுத்த இரும்பு தடுப்பு, சுரங்க பாதைக்கு முன்னதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கம் போல அவ்வழியாக சென்ற அரசு பேருந்து தடுப்பை கடந்துச் சென்ற போது, பேருந்தின் மேல் பகுதியில் வைத்திருந்த ஸ்டெப்னி டயர், இரும்பு தடுப்பு மீது மோதியது.



இதனால்இரும்பு தடுப்பு உடைந்து பேருந்தின் மீது விழுந்தது. இதில் பேருந்தின் பின் பக்க கண்ணாடி நொறுங்கியது. ஆனால் அதிஷ்டவசமாக பயணிகளுக்கு எந்த பாதிப்பு இல்லை.



இதையடுத்து அங்கு வந்த போக்குவரத்து போலீசார்தடுப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மாற்று பாதையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இரும்பு தடுப்பு விழுந்த போது இரு சக்கர வாகனங்கள், கார்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...