கோவை பாரதியார் பல்கலைகழக காலியிடத்தில் தீவிபத்து

கோடைக் காலம் துவங்கியுள்ள நிலையில் கோவை மருதமலை சாலை பாரதியார் பல்கலைகழகம் பின்புறம் உள்ள மலையை ஒட்டிய பகுதியில் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: பாராதியார் பல்கலைக்கழகம் பின்புறமுள்ள வனப்பகுதியில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மருதமலை சாலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் பின்புறம், மலையை ஒட்டிய பகுதியில் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான காலியிடம் உள்ளது.



அங்கு கோரை புற்கள், மரங்கள் மற்றும் புதர்கள் உள்ள பகுதியில் திடிரென மாலை நேரத்தில் தீ பிடித்து எரியத்துவங்கியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் தொண்டாமுத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

2 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் மாலை நேரத்தில் லேசான மழையும் பெய்ததால் காட்டு தீ பரவாமல் உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...