'கோவை மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழப்பு இல்லை' சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் விளக்கம்.


சின்னமேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்குமார், 35, தொடர்ந்து காய்ச்சலால் அவதிபட்டு வந்தார். இதனை அடுத்து கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

இதேபோல் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முகமது ஹனீபா, 78 என்ற முதியவரும் தனியார் மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தார். 

மேலும், கோவை அரசு மருத்துவமனையில், பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்குள்ளான, 29 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர கோவையிலுள்ள பல தனியார் மருத்துவமனைகளில் 30 க்கும் மேற்பட்டோர் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கோவை அரசு, தனியார் மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் இதுவரை பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று பலனளிக்காமல் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுகாதார துறையினர் உயிரிழப்பு இல்லை என்றே கூறி வருகின்றனர்.

இது குறித்து, கோவை மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஓ. பானுமதி இன்று பத்திரிக்கையாளர்களிடம் கூறும் பொது "கோவை மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழப்பு இல்லை. அரசு மருத்துவமனையில் பல்வேறு காரணங்களுக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழப்போர் டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு உயிரிழந்ததாக தவறான தகவல் தெரிவிக்கப்படுகிறது. பன்றிக்காய்ச்சலுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் 68 பேர்  சிகிச்சை பெற்று வந்ததாகவும் இதில் நேற்று 50 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சுகாதார துறையில் போதுமான மருந்துகள் கைவசம் உள்ளன. தவறான தகவல்கள் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...