கோவை சிங்காநல்லூரை சேர்ந்த சசிதரன் என்பவர் மதுபோதைக்கு அடிமையானவர். மது குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் மனமுடைந்த அவர் சாணிப்படவுரைக் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதி சார்ந்தவர் சசிதரன் (வயது60). மது போதைக்கு அடிமையானவர். வேலைக்கு செல்லாமல் குடும்பத்தினரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார்.
இந்த நிலையிலே இவர் சம்பவத்தன்று தனது மனைவியிடம் மது பருகுவதற்காக பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.ஆனால் அவரது மனைவி பணம் தர மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சசிதரன் வீட்டில் இருந்த சாணி பவுடரை தண்ணீரில் கலக்கி குடித்துள்ளார்.
இதனை அறிந்த அவரது குடும்பத்தார், உடனடியாக சசீதரனை 108 ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சசிதரன் இறந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குடி குடியை கெடுக்கும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், மது குடிக்க பணம் கிடைக்காததால் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிங்கநல்லூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையிலே இவர் சம்பவத்தன்று தனது மனைவியிடம் மது பருகுவதற்காக பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.ஆனால் அவரது மனைவி பணம் தர மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சசிதரன் வீட்டில் இருந்த சாணி பவுடரை தண்ணீரில் கலக்கி குடித்துள்ளார்.
இதனை அறிந்த அவரது குடும்பத்தார், உடனடியாக சசீதரனை 108 ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சசிதரன் இறந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குடி குடியை கெடுக்கும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், மது குடிக்க பணம் கிடைக்காததால் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிங்கநல்லூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.