கோவையில் குடிக்க பணம் கொடுக்க மறுத்த மனைவி - விரக்தியில் குடிமகன் தற்கொலை!

கோவை சிங்காநல்லூரை சேர்ந்த சசிதரன் என்பவர் மதுபோதைக்கு அடிமையானவர். மது குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் மனமுடைந்த அவர் சாணிப்படவுரைக் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதி சார்ந்தவர் சசிதரன் (வயது60). மது போதைக்கு அடிமையானவர். வேலைக்கு செல்லாமல் குடும்பத்தினரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார்.

இந்த நிலையிலே இவர் சம்பவத்தன்று தனது மனைவியிடம் மது பருகுவதற்காக பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.ஆனால் அவரது மனைவி பணம் தர மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சசிதரன் வீட்டில் இருந்த சாணி பவுடரை தண்ணீரில் கலக்கி குடித்துள்ளார்.

இதனை அறிந்த அவரது குடும்பத்தார், உடனடியாக சசீதரனை 108 ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சசிதரன் இறந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குடி குடியை கெடுக்கும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், மது குடிக்க பணம் கிடைக்காததால் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிங்கநல்லூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...