பிஏசிஎல் நிறுவனத்தில் முதலீடு செய்த தொகையை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

பிஏசிஎல் நிறுவனத்தில் முதலீடு செய்த 6 கோடி ரூபாய் தொகையை மீட்டுத் தரக் கோரி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் அதன் வாடிக்கையாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

அம்மனுவில், கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் டெல்லியை தலைமையிடமாக கொண்டு கடந்த 35 வருடங்களாக செயல்பட்டு வந்த பியர்ல்ஸ் அக்ரோடெக் கார்ப்பரேசன் லிமிட்டு (பிஏசிஎல்) என்ற நிறுனத்தில் மாதத்தவணையாகவும், நிரந்தர வைப்பு தொகையாகவும் எங்கள் பகுதி முகவர்கள் மூலம் முதலீடு செய்தோம்.

நாங்கள் கூலி வேலை செய்து சிறுகச்சிறுக சேமித்து பிற்கால குடும்ப தேவைக்காகவும், ஜீவாதாரத்திற்காகவும் இதை முழுக்க முழுக்க நம்பியே முதலீடு செய்தோம்.

நாங்கள் செய்த முதலீட்டுத் தொகைக்கு முதிர்வு தேதியும் முடிந்துவிட்டது. இருப்பினும் எங்களது தொகைகள் வழங்கப்படவில்லை. லட்சக் கணக்கான மக்கள் முதலீடு செய்த சுமார் 6 கோடி ரூபாய் என்னவானது என்றே தெரியவில்லை.

எனவே, மத்திய, மாநில அரசுகளும், கோவை மாவட்ட நிர்வாகமும் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்களது தொகை திரும்பக்கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...