கோவை பி.கே.புதூரில் வீடு புகுந்து திருட முயன்ற பட்டதாரி பெண் கைது!

கோவை பி.கே.புதூர் அருகே மூதாட்டி மட்டும் தனியாக இருந்த வீட்டில் பர்தா அணிந்து திருட முயன்ற பட்டதாரி பெண்ணான அனிதா என்பவரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்தனர்.


கோவை: பி.கே.புதூரில் வீடு புகுந்து திருட முயன்ற பட்டதாரி பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோவை பி கே புதூர் சாரதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும், இவரது மனைவியும் வழக்கம்போல் பணிக்கு சென்று விட்டனர். அப்போது சிவக்குமாரின் தாய் கமலம் (92) வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

பிற்பகலில் பர்தா அணிந்து வீட்டிற்குள் நுழைந்த பெண் ஒருவர், வீட்டிலிருந்த பீரோவை திறந்து திருடன் முயன்றதாக தெரிகிறது.

இதனால் கமலம் சத்தம் போட்டுள்ளார். உடனடியாக அந்த பெண் வீட்டிலிருந்து வெளியேறி தப்ப முயன்றபோது, கமலத்தின் சத்தம் கேட்டு வெளியே வந்த, நாகராஜ் என்பவர் தனது மனைவியுடன் சேர்ந்து அப்பெண்ணை மடக்கிப் பிடித்து குனியமுத்தூர் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் பிடிபட்ட பெண் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவரது மனைவி அனிதா (30) என்பதும், பட்டதாரியான அனிதா ஐடி நிறுவனத்தில் பணியாற்றி விட்டு தற்போது வீட்டிலிருந்து குழந்தைகளை கவனித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் சிவகுமார் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து பீரோவிலிருந்த நகைகளைத் திருட முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை பிணையில் விடுதலை செய்யவும், 10 நாட்கள் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திடவும் உத்தரவிட்டார். பணத் தேவைக்காக பட்டதாரி பெண் திருட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...