உடுமலை அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1.50 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு - நகராட்சி அதிகாரிகள் அதிரடி!

உடுமலை அடுத்த திருப்பூர் சாலை அருகே அர்பன் பாங்க் காலனி மனைப்பிரிவில் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1.50 கோடி மதிப்பிலான 10.50 சென்ட் நிலத்தை உரிமையாளர், நகராட்சியிடம் ஒப்படைக்காமல், வேறு நபருக்கு விற்பனை செய்ய திட்டமிட்ட நிலையில் அதிகாரிகள் அதனை அதிரடியாக மீட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1.50 கோடி மதிப்பிலான நிலத்தை நகராட்சி அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

உடுமலை நகராட்சி எல்லைக்குட்பட்ட திருப்பூர் சாலை அருகேயுள்ள அர்பன் பாங்க் காலனி மனைப்பிரிவில் மொத்த பரப்பளவில் 10 சதவீதம் பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 10.50 சென்ட் நிலமானது நகர் ஊரமைப்பு துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு பூங்கா அமைப்பதற்காக வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை மனைப்பிரிவு உரிமையாளர் நகராட்சிக்கு ஒப்படைக்காமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அதனை விற்பனை செய்ய முயற்சி செய்யப்பட்டதை தொடர்ந்து, நகராட்சியால் பூங்கா இடத்தினை கையகப்படுத்தி பொதுமக்கள் அறியும் வண்ணம் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் இந்த இடத்தினை கிரயம் பெறாமலும், ஏமாறாமலும் இருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.



மீட்கப்பட்ட இடத்தின் மொத்த பரப்பளவு 10.50 சென்ட் ஆகும். இதன் மதிப்பு சுமார் ரூ.1.50 கோடி ஆகும்.

மேலும், நகராட்சியால் மனைப்பிரிவில் ஒதுக்கப்பட்ட பொது ஒதுக்கீடுகள் ஒப்படைக்காமல் உள்ளவற்றை. கண்டறிந்து நகராட்சி சுவாதீனப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்றத் தலைவர் மு.மத்தின் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...