தாராபுரத்தில் தனியார் ஆம்புலன்ஸின் தரம் குறித்து ஆர்டிஓ அதிகாரிகள் திடீர் சோதனை!

தாராபுரம் வட்டாரத்தில் இயங்கி வரும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களின் உரிமம் மற்றும் தரம் குறித்து திடீர் சோதனை நடத்தப்பட்டது. அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்ற இந்த சோதனையில் உரிமம் காலாவதியான 2 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களின் உரிமம் மற்றும் தரம் குறித்து திடீர் சோதனை நடைபெற்றது.

தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆம்புலன்ஸ் வாகனங்களின் உரிமம் மற்றும் தரம் குறித்து சோதனை மேற்கொள்ள வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார்.



இந்த உத்தரவின் பேரில், தாராபுரம் அரசு மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டிருக்கும் 10க்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களில் திடீர் சோதனை நடைபெற்றது.



இந்த சோதனையில் உரிமம் காலாவதியான 2 ஆம்புலன்ஸ் வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.



மேலும், இதுபோன்று உரிய ஆவணம் இல்லாத ஆம்புலன்ஸ் வாகனங்களை பயன்படுத்தக்கூடாது என வாகன ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதேபோல், ஆட்டோ ரிக்‌ஷாக்கள், இரவு நேரங்களில் முகப்பு விளக்கு பயன்படுத்தாமல், இயக்கிய வாகனங்களும் தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...