இரும்பு உருக்கு ஆலை விவகாரம் - பல்லடத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் கைது!

பல்லடம் அருகே அனுப்பட்டி கிராமத்தில் உள்ள இரும்பு உருக்கு ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால், நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறும் பொதுமக்கள், மார்ச் மாதத்துடன் முடியவுள்ள ஆலையின் உரிமத்தை புதுப்பிக்க எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இரும்பு உருக்கு ஆலையில் உரிமத்தை புதுப்பிக்க எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.



பல்லடம் அடுத்த அனுப்பட்டி கிராமத்தில் கடந்த 14 ஆண்டுகளாக பழைய இரும்புகளை உருக்கும் கண்ணப்பன் அயன் ஸ்டில்ஸ் என்ற ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையானது, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதியை பெறாமல் சட்டவிரோதமாக இந்த ஆலை இயங்கி வருவதாகவும், ஆலையை சுற்றி பசுமை வளையங்கள் அமைக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

மேலும், கழிவுகளை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் திறந்த வெளியில் கழிவுகளை கொட்டுவதாகவும், இரவு நேரங்களில் அதிகமாக புகை வெளியேற்றப்படுவதால் பொதுமக்களுக்கு நோய் தொற்று அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், இந்த ஆலைக்கு மார்ச் மாதத்தோடு உரிமம் நிறைவடைவதால் ஆலையை இயக்குவதற்கான உரிமத்தை மீண்டும் வழங்க கூடாது எனக்கூறி இன்று அனுப்பட்டி கிராம மக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.



இந்நிலையில் பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் சௌமியா தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் காலை முதலே பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டிருந்தனர்.



அப்போது, வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற அனுப்பட்டி கிராம மக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.



மேலும் கைது செய்யப்பட்டவர்கள் வேனில் ஏற்றிச்செல்லப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...