மனைவி, குழந்தைகளை பிரிந்த சோகம் - கோவையில் பனியன் நிறுவனத் தொழிலாளி தற்கொலை!

மனைவி, குழந்தைகள் பிரிந்த சோகத்தில், திருப்பூரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர், கோவை உக்கடத்தில் விஷம் குடித்து மயங்கினார். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூர் பாலன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது55). இவர் பனியன் கம்பெனியில், கட்டிங் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கணவன் - மனைவி இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக கணவரை பிரிந்த அவரது மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு பிரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் மன வேதனையுடன் காணப்பட்ட ஜெயக்குமார், கோவை வந்து, உக்கடம் பகுதியில் விஷம் குடித்து மயங்கினார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஜெயக்குமாரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து இவரது மனைவி லட்சுமி பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...