‘ஸ்கேனர் ஆபரேட்டர்’ நியமனத்தில் தாமதம் - கோவை ஏர்போர்ட்டில் ரூ.30 லட்சம் வருவாய் இழப்பு!

கோவை விமான நிலைய சரக்கக அலுவலகத்தில் ‘ஸ்கேனர் ஆபரேட்டர்’ பணிக்கு ஊழியர்கள் நியமனம் செய்வதில் காலதாமதம் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக உள்நாட்டு சரக்கு போக்குவரத்து பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், கடந்த 2 மாதங்களில் ரூ.30 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


கோவை: கோவை பீளமேடு விமான நிலைய வளாகத்தில் ஒருங்கிணைந்த சரக்கக வளாகம் அமைந்துள்ளது. உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படும் சரக்குகள் இங்கு கையாளப்படுகின்றன. சேவை இல்லாத வெளிநாடுகளுக்கு ‘பாண்டட் டிரக்’ என்ற சேவை மூலம் கோவை விமான நிலையத்தில் இருந்து சரக்குகள் அனுபப்படுகின்றன.



மாதந்தோறும் சராசரியாக உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 700 டன் மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து பிரவில் 150 டன் வீதம் 850 டன் எடையிலான சரக்குகள் கையாளப்பட்டு வந்தன. இந்நிலையில், ஸ்கேனர் ஆபரேட்டர் தொடர்பாக விமான நிலைய ஆணையகம் வெளியிட்ட புதிய விதிமுறையால் பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கோவையில் இருந்து சரக்குகள் அனுப்பும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:

உள்நாட்டு பிரிவில் கோவையில் இருந்து பல்வறு நகரங்களுக்கு அனுப்பப்படும் சரக்குகள் ஸ்கேனர் ஆபரேட்டர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு அனுமதி அளித்தபின் விமானங்களில் ஏற்றிச் செல்லப்படும். இதுவரை விமான நிறுவனங்களே ஊழியர்களை நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்திய விமான நிலைய ஆணையகம்(ஏஏஐ) கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் புதிய விதிமுறையை அறிவித்தது.

அதன்படி, விமான நிலைய ஆணையகம் சார்பில் ஸ்கேனிங் ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட வேண்டும். புதிய விதிமுறையால் கோவை உள்பட நாடு முழுவதும் 13 விமான நிலையங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சென்னையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சியில் உள்நாட்டு சரக்கு போக்குவரத்து கையாளப்படுவது இல்லை. மதுரையில் பிரச்சினை இருந்தது. சமீபத்தில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் அதற்கென பிரத்யேக பயிற்சி பெற்ற ஊழியர்கள் இல்லை. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக நிலவும் இப்பிரச்சினையால் கடந்த இரு மாதங்களில் தலா 350 டன் என மொத்தம் 700 டன் எடையிலான சரக்குகள் வேறு விமான நிலையங்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. இதனால், ரூ.30 லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஐந்து ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.இது தொடர்பாக விமான நிலைய ஆணையக தலைமையகத்திடம் தெரிவித்துள்ளோம். இந்த மாத இறுதிக்குள் ஸ்கேனிங் ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...