கோவையில் ஆன்லைனில் வேலை தேடிய பெண்ணிடம் ரூ.9 லட்சம் மோசடி

கோவையில் ஆன்லைனில் வேலை தேடிய அத்திப்பாளையத்தை சேர்ந்த 40 வயது பெண்ணிடம், முதலீடு என்ற பெயரில் 9 லட்சம் ரூபாயை சுருட்டிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் சரவணம்பட்டி அடுத்த அத்திப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் ஆன்லைனில் வேலை தேடினார். அப்போது அவரின் அலைபேசியில் வந்த டெலகிராம் லிங்கில் ரேட்டிங் தரும் பணி குறித்து தெரிவித்திருக்கின்றது.

இதனை நம்பிய பெண் டெலிகிராம் ஆப்பில் சில பக்கங்களுக்கு சென்றுள்ளார். ஒவ்வொரு டாஸ்கையும் கம்பிளீட் செய்திருக்கின்றார். முதன்முறையாக முதலீடு செய்து 1000 ரூபாயை சம்பாதித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதிக முதலீடு செய்ய முடிவெடுத்த அப்பெண் அவரது, வங்கி கணக்கில் 15 நாட்களுக்குள் பத்துக்கும் மேற்பட்ட முறை 9,12,106 ரூபாயை எதிர் தரப்பினர் வங்கி கணக்குக்கு மாற்றினார். அப்போது முதலீடு செய்த பணம் திரும்பி வரவில்லை.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, இவரது பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...