கோவையில் ஆன்லைனில் வேலை தேடிய பெண்ணிடம் ரூ.9 லட்சம் மோசடி

கோவையில் ஆன்லைனில் வேலை தேடிய அத்திப்பாளையத்தை சேர்ந்த 40 வயது பெண்ணிடம், முதலீடு என்ற பெயரில் 9 லட்சம் ரூபாயை சுருட்டிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் சரவணம்பட்டி அடுத்த அத்திப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் ஆன்லைனில் வேலை தேடினார். அப்போது அவரின் அலைபேசியில் வந்த டெலகிராம் லிங்கில் ரேட்டிங் தரும் பணி குறித்து தெரிவித்திருக்கின்றது.

இதனை நம்பிய பெண் டெலிகிராம் ஆப்பில் சில பக்கங்களுக்கு சென்றுள்ளார். ஒவ்வொரு டாஸ்கையும் கம்பிளீட் செய்திருக்கின்றார். முதன்முறையாக முதலீடு செய்து 1000 ரூபாயை சம்பாதித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதிக முதலீடு செய்ய முடிவெடுத்த அப்பெண் அவரது, வங்கி கணக்கில் 15 நாட்களுக்குள் பத்துக்கும் மேற்பட்ட முறை 9,12,106 ரூபாயை எதிர் தரப்பினர் வங்கி கணக்குக்கு மாற்றினார். அப்போது முதலீடு செய்த பணம் திரும்பி வரவில்லை.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, இவரது பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...