கோவை சிங்காநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிரடி

கோவை சிங்காநல்லூர் நெடுஞ்சாலைப் பகுதியில் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை காவல்துறை உதவியுடன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அகற்றினர். மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை செல்லும் சாலையில் நடந்து செல்பவர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், பெரும் இடையூறாக நிறைய ஆக்கிரமிப்புகள் இருந்தது.

இந்த சாலை எப்பொழுதும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலை. நிறைய ஆக்கிரமிப்புகள் இருந்ததால் விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு வந்தது.



இது சம்பந்தமாக பொதுமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று நேற்று சிங்காநல்லூர் காவல்துறையினரின் பாதுகாப்போடு தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

இந்நிலையில், இந்தப் பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் நடைபெறாமல் தடுக்ககாவல்துறை கண்காணிக்க வேண்டும் என்று ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்க தலைவர் லோட்டஸ் மணிகண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...