வனவிலங்குகள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய மேட்டுப்பாளையத்தில் 7 இடங்களில் தண்ணீர் தொட்டி!

மேட்டுப்பளையம் வனப்பகுதியில் வறட்சி தொடங்கியதால், வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக 7 இடங்களில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளதால், வனவிலங்குகள் வெளியேறுவது தடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க வசதியாக 7 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

மேட்டுப்பாளையம் வனப்பகுதியானது, 10,000 ஹெக்டர் பரப்பளவு கொண்ட மிக நீண்ட வனப்பகுதியாகும்.

இந்த வனப்பகுதியில் சிறுத்தை, புலி, காட்டு யானை, காட்டெருமை, செந்நாய், கரடி என ஏராளமான பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

இந்தநிலையில் கோடைக்காலம் நெருங்கி வரும் சூழலில் தற்போது மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் வறட்சி தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வனப்பகுதி முழுவதும் அதன் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இதனால் வனத்தில் உள்ள மரங்கள், செடி, கொடிகள் காய்ந்து வருவதால் வன உயிரினங்கள் உணவு மற்றும் தண்ணீர் தேவைகளுக்காக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது.

குறிப்பாக மேட்டுப்பாளையத்தில் உள்ள ஜக்கனாரி, கன்டியூர், உலிக்கல் போன்ற வனப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டு வரும் நிலையில், அவற்றின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய தற்போது வனத்துறையினர் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி ஏற்கனவே மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர் வனப்பகுதியில் உள்ள செயற்கை தண்ணீர் தொட்டிகளை மேம்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, நடப்பு பருவத்தில் மட்டும் வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அடர் வனத்தில் 7 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் புதியதாக அமைத்து வருகின்றனர்.

ஜக்கனாரி காப்பு காட்டில் ரூ.13 லட்சம் செலவில் போர்வெல் அமைத்து சோலார் மூலம் இயங்கும் மோட்டார்களை பொருத்தி தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே உள்ள கசிவு நீர் குட்டைகளில் வறட்சி காரணமாக தண்ணீர் வற்றி வரும் நிலையில் தற்போதைய தண்ணீர் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் வனத்துறையினர் தேவைப்பட்டால் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்ப உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதன் மூலம் வனவிலங்குகளின் தண்ணீர் தேவை அடர் வனத்திலேயே பூர்த்தி செய்யபட்டு வன உயிரினங்கள் வனத்தில் இருந்து வெளியேறுவது தடுக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...