வனவிலங்குகள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய மேட்டுப்பாளையத்தில் 7 இடங்களில் தண்ணீர் தொட்டி!

மேட்டுப்பளையம் வனப்பகுதியில் வறட்சி தொடங்கியதால், வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக 7 இடங்களில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளதால், வனவிலங்குகள் வெளியேறுவது தடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க வசதியாக 7 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

மேட்டுப்பாளையம் வனப்பகுதியானது, 10,000 ஹெக்டர் பரப்பளவு கொண்ட மிக நீண்ட வனப்பகுதியாகும்.

இந்த வனப்பகுதியில் சிறுத்தை, புலி, காட்டு யானை, காட்டெருமை, செந்நாய், கரடி என ஏராளமான பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

இந்தநிலையில் கோடைக்காலம் நெருங்கி வரும் சூழலில் தற்போது மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் வறட்சி தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வனப்பகுதி முழுவதும் அதன் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இதனால் வனத்தில் உள்ள மரங்கள், செடி, கொடிகள் காய்ந்து வருவதால் வன உயிரினங்கள் உணவு மற்றும் தண்ணீர் தேவைகளுக்காக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது.

குறிப்பாக மேட்டுப்பாளையத்தில் உள்ள ஜக்கனாரி, கன்டியூர், உலிக்கல் போன்ற வனப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டு வரும் நிலையில், அவற்றின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய தற்போது வனத்துறையினர் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி ஏற்கனவே மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர் வனப்பகுதியில் உள்ள செயற்கை தண்ணீர் தொட்டிகளை மேம்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, நடப்பு பருவத்தில் மட்டும் வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அடர் வனத்தில் 7 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் புதியதாக அமைத்து வருகின்றனர்.

ஜக்கனாரி காப்பு காட்டில் ரூ.13 லட்சம் செலவில் போர்வெல் அமைத்து சோலார் மூலம் இயங்கும் மோட்டார்களை பொருத்தி தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே உள்ள கசிவு நீர் குட்டைகளில் வறட்சி காரணமாக தண்ணீர் வற்றி வரும் நிலையில் தற்போதைய தண்ணீர் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் வனத்துறையினர் தேவைப்பட்டால் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்ப உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதன் மூலம் வனவிலங்குகளின் தண்ணீர் தேவை அடர் வனத்திலேயே பூர்த்தி செய்யபட்டு வன உயிரினங்கள் வனத்தில் இருந்து வெளியேறுவது தடுக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...