தாராபுரத்தில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் - விரைவில் திறக்க கோரிக்கை

தாராபுரத்தில் ரூ.2.20 கோடி செலவில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தை நேரில் பார்வையிட்ட விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், இந்த மையத்தை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டடம் தாராபுரம் வசந்தம் நகரில் ரூ.2 கோடியே 20 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டப்பட்டது. இதில் உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகம், தோட்டக்கலை துறை அலுவலகம், வேளாண் பொறியியல் அலுவலகம், வேளாண் வணிக அலுவலகம் உள்பட அனைத்தும் விவசாய துறைகளும், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் செயல்பட உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன.

இந்தக் கட்டிடங்களை உடனடியாக திறப்பதன் மூலம் விவசாயிகள் தங்களது பயிர்கள் தொடர்பாக உள்ள சந்தேகங்களை போக்கவும், தொழில்நுட்ப வசதியை பெறவும், வேளாண் இடுப்பொருட்களை பெறவும், ஒரே இடத்தில் அனைத்து தேவைகளையும் பெற இயலும். கட்டிட பணிகள் முடிவடைந்து ஆறு மாதங்கள் ஆனநிலையில் வேளாண்மை மையத்தை திறக்க இதுவரை திறக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட தலைவர் அலங்கயம் ஈஸ்வரமூர்த்தி, தமிழ்நாடு கட்சி சார்பற்ற விவசாய சங்க மாநில தலைவர் ஏ.காளிமுத்து மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தைப் பார்வையிட்டனர்.

பின்னர் பேசிய உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட தலைவர், “ விவசாயிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனரிடம் ஆலோசனை பெற்று இடுபொருட்களை பெற்றுக்கொண்டு மீண்டும் வேளாண்மை பொறியியல் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் கவுண்டச்சிபுத்தூர் ஊராட்சியில் சேரன் நகரில் செயல்பட்டு வரும் தோட்டக்கலை அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும். எனவே, விவசாயிகள் நலக்கருதி, காலம் தாழ்த்தாமல் கட்டிடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்” என்றார்.

Newsletter

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...