தாராபுரத்தில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு - மக்கள் அவதி

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த சில வாரங்களாகத் தொடரும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால், குழந்தைகள், முதியவர் உட்பட பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் காலை, மாலை, மதியம், இரவு என பல்வேறு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. மேலும், மின்சாரம் வந்து சென்றால் மின்விசிறி உட்பட வீடுகளில் உள்ள எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரிக் சாதனங்கள் பழுதாகிவிடுகின்றன.

தற்போது 12ஆம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில், தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு தேர்வில் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் வகையில் தொடரும் இந்த மின்வெட்டை சரிசெய்து, சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என தாராபுரம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...