ஆஸ்கர் விருது புகழ் முதுமலை தம்பதி பொம்மன் - பெள்ளி - நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் முதல்வர்!

ஆஸ்கர் விருதுபெற்ற 'The Elephant Wishperers' ஆவணப் படத்தில் இடம்பெற்ற முதுமலையைச் சேர்ந்த பொம்மன் - பெள்ளி தம்பதி இன்று சென்னையில் முதமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் அளித்தார்.



கோவை: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றுவரும் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், 'The Elephant Wishperers' ஆவணப் படம் ஆஸ்கர் விருது வென்றது. முதுமலையில் கைவிடப்பட்ட யானைக் குட்டிகளை வளர்க்கும் முதுமலையைச் சேர்ந்த பொம்மன் - பெள்ளி தம்பதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படம் ஆஸ்கர் விருது பெற்றதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.



இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பொம்மன்-பெள்ளி தம்பதி நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி முதலமைச்சர் வாழ்த்துத் தெரிவித்தார்.

பின்னர், ஆஸ்கர் விருதுபெற்ற மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில், தமிழக அரசின் சார்பில் முதுமலையில் உள்ள தெப்பக்காடு மற்றும் ஆனைமலையில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் பணியாற்றும், 91 பணியாளர்களுக்கும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், தம்பதி பொம்மன் - பெள்ளி இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசாலையை முதல்வர் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...