ஆஸ்கர் விருது புகழ் முதுமலை தம்பதி பொம்மன் - பெள்ளி - நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் முதல்வர்!

ஆஸ்கர் விருதுபெற்ற 'The Elephant Wishperers' ஆவணப் படத்தில் இடம்பெற்ற முதுமலையைச் சேர்ந்த பொம்மன் - பெள்ளி தம்பதி இன்று சென்னையில் முதமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் அளித்தார்.



கோவை: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றுவரும் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், 'The Elephant Wishperers' ஆவணப் படம் ஆஸ்கர் விருது வென்றது. முதுமலையில் கைவிடப்பட்ட யானைக் குட்டிகளை வளர்க்கும் முதுமலையைச் சேர்ந்த பொம்மன் - பெள்ளி தம்பதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படம் ஆஸ்கர் விருது பெற்றதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.



இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பொம்மன்-பெள்ளி தம்பதி நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி முதலமைச்சர் வாழ்த்துத் தெரிவித்தார்.

பின்னர், ஆஸ்கர் விருதுபெற்ற மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில், தமிழக அரசின் சார்பில் முதுமலையில் உள்ள தெப்பக்காடு மற்றும் ஆனைமலையில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் பணியாற்றும், 91 பணியாளர்களுக்கும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், தம்பதி பொம்மன் - பெள்ளி இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசாலையை முதல்வர் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...