கோவையில் குடும்பத்தகராறில் மகன் மாயம் - தந்தை காவல் நிலையத்தில் புகார்

கோவை துடியலூரை அடுத்த என்.ஜி.ஜி.ஓ.காலனியை சேர்ந்த கண்ணன் என்பவரை காணவில்லை என, அவரது தந்தை வடிவேல் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


கோவை: கோவை துடியலூரை அடுத்த என்.ஜி.ஜி.ஓ. காலனி பகுதியில் குடியிருந்து வருபவர் வடிவேல், இவரது 48 வயது மகன் கண்ணன், தங்க நகை வேலை செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

மேலும், கண்ணன் குடிக்கு அடிமையானவர் என தெரிகிறது. இதன் காரணமாக இவரது தந்தைக்கும் இவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கண்ணன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

அப்போது கோவித்துக் கொண்டு வீட்டை விட்டுச் சென்ற கண்ணன், வீடு திரும்பவில்லை என தெரிகிறது. இதையடுத்து அக்கம், பக்கம் மற்றும் நண்பர்கள், உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், அவரது தந்தை வடிவேல் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவுசெய்த போலீசார் காணாமல் போன கண்ணனை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...