சத்துமாத்திரை சாப்பிட்ட விவகாரம் - மாணவிகள் உடல்நலம் தேறி வருவதாக கோவை அரசு மருத்துவர்கள் தகவல்!

அதிக சத்து மாத்திரைகள் சாப்பிட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூன்று மாணவிகள் ஓரளவு நலமடைந்து பொதுசிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டனர். தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்ப்டடு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.



கோவை: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள உருதுப் பள்ளியில் சத்து மாத்திரையை அதிக எண்ணிக்கையில் சாப்பிட்ட 4 மாணவிகள் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.



அதில் 13 வயது மாணவிக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் செல்லும் வழியில் சேலம் அருகே உயிரிழந்தார்.

இந்த நிலையிலே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், மூன்று மாணவிகள் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் மூன்று பேரும் ஓரளவு நலமடைந்து பொது சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.

அந்த மாணவிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அரசு மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் தெரிவித்த நிலையில், சிறுமிகள் உடல் நலம் தேறியுள்ளதாகவும், விரைவில் வீட்டிற்கு அனுப்ப வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...